Sunday, 11 December 2016

தாயை சந்திக்க சென்ற மோடி..!!

Z ப்ளஸ் பாதுகாப்பை மீறி தனது சொந்த ஊரில் உள்ள தாயாரை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் பல்வேறு அரசு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நிகழ்சிகளில் பங்கேற்ற பின் பாதுகாப்பு அதிகாரிகளின் ‘ப்ரோட்டோகால்’ விதிகளை மீறி தனது சொந்த ஊரான ரேசானுக்கு திடீரென வாகனத்தை கொண்டு செல்ல சொன்னார். அங்கு தனது தாயார் ஹீரா பென்னை சந்தித்த மோடி அரை மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் நலம் விசாரித்து விட்டு பின்னர் பாதுகாப்பு வளையத்துக்கு திரும்பினார். மோடியின் சகோதரருடன் வசித்து வரும் ஹீரா பென் அண்மையில் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive